Latestமலேசியாவிளையாட்டு

விளையாட்டாளரைக் குறை கூறியதால் , வர்ணனையாளருக்கு மிரட்டல் !

ஷா ஆலாம், செப் 1 – விளையாட்டாளரின் அடைவுநிலை குறித்து குறை கூறியதால், விளையாட்டு வர்ணனையாளருக்கு, ரசிகர் ஒருவரிடமிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.

தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை செய்யும் அந்த வர்ணனையாளர், அண்மைய காலமாக சரிந்து வரும் தேசிய ஒற்றையர் பூப்பந்து விளையாட்டாளர் Lee Zhi Jia – வின் அடைவுநிலை குறித்து பேசியிருந்ததாக நம்பப்படுகிறது .

அதையடுத்து, விளையாட்டாளர்கள் பற்றி மோசமாக பேசினால், தாக்கப்படுவாய் என கூறி அவருக்கு , இன்ஸ்தாகிராமில் மூலமாக மிரட்டல் விடுக்கப்பட்டது .

அதை தொடர்ந்து, அந்த மிரட்டல் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தலாக அமையுக் கூடுமென கூறி, அந்த வர்ணனையாளர் போலீஸ் புகார் செய்திருப்பதாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் Mohd Iqbal Ibrahim தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!