ஈப்போ, மார்ச் 19 – சமூக ஊடக “உள்ளடகத்தை” உருவாக்க, மாணவர்களை பயன்படுத்த கூடாது என ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை முழுமையானது அல்ல.
மாறாக, கல்வி சார்ந்த அல்லது விழிப்புணர்வு தொடர்புடைய உள்ளடக்கங்களை உருவாக்க ஆசிரியர்கள் ஊக்குவிக்கப்படுவதாக, கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் தெரிவித்தார்.
சமூக ஊடக உள்ளடக்கம் தொடர்பில், கல்வி அமைச்சு வழிகாட்டியை கொண்டுள்ளது.
அதனால், சமூக ஊடக உள்ளடக்கத்தை உருவாக்க விரும்பினால், அது தொடர்பில் கல்வி அமைச்சு வரையறுத்துள்ள அந்த வழிகாட்டியை பின்பற்றுமாறு ஏற்கனவே பலமுறை தாம் நினைவுறுத்திவுள்ளதை, பட்லினா சுட்டிக் காட்டினார்.
கல்வி சார்ந்த, பாடத்திட்டத்துடன் தொடர்புடைய அல்லது விழிப்புணர்வை ஏற்படுத்தும் உள்ளடக்கங்களை ஆசிரியர்கள் உருவாக்கலாம். எனினும், அது வழிகாட்டியை பின்பற்றி இருக்க வேண்டும்.