கோலாலம்பூர், பிப் 13 – பாத்தேக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக டத்தோ சந்திரன் ராமமூர்த்தி மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரது இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கேப்டன் முஷாபிஸ் முஸ்தபா பக்ரிக்கு பதிலாக சந்திரன் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு முன் 2013 ஆம் ஆண்டு மலிண்டோ ஏர் தொடங்கப்பட்டு 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை செயல்பட்டபோது பாத்தேக் ஏர் நிறுவனத்தின் முதலாவது தலைமை செயல் அதிகாரியாக சந்திரன் பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின் அவர் “Lion Air Group” குழுமத்தின் வியூக இயக்குனராக பதவியேற்றார். டத்தோ சந்திரன் தலைமைத்துவத்தின் கீழ் பாத்தேக் ஏர் துரித வளர்ச்சி கண்டதோடு அதன் சேவையும் விரிவடைந்தது.
பாத்தேக் ஏர் நிறுவனத்தின் நீண்ட கால விரிவாக்கத்திற்கு சந்திரன் முக்கிய பங்காற்றியதாக இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் அந்த நிறுவனம் தெரிவித்தது. இதனிடையே முஷாபிஸ் “Lion Air Group”பின் பாதுகாப்பு இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்