Latestமலேசியா

தகராறைத் தொடர்ந்து தம்பதியர் பினாங்கு பாலத்திலிருந்து கடலில் குதித்தனர்.

ஜோர்ஜ் டவுன், ஜன 16 – பினாங்கு பாலத்தின் 2.8ஆவது கிலோமீட்டரில் நேற்றிரவு தகராறில் ஈடுபட்டிருந்த ஒரு தம்பதியர் திடீரென கடலில் குதித்தனர். அதிஸ்டவசமாக அந்த வழியே சென்ற ராணுவ வீரர் என்று நம்பப்படும் ஆடவர் ஒருவர் உடனடியாக இச்சம்பவத்தை கண்டு கடலில் குதித்து சுமார் 30 வயதுடைய அந்த இருவரையும் காப்பாற்றினார். அவருக்கு உதவியாக மீன்பிடி படகும் அங்கு வந்து அந்த தம்பதியரை மீட்க உதவியது. நேற்றிரவு மணி 7.50 அளவில் நிகழ்ந்த அந்த சம்பவம் குறித்து பிறை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அந்த இருவரும் பிறையை நோக்கி ஹோண்டா சிவிக்
காரில் சென்று கொண்டிருந்தபோது பினாங்கு பாலத்தின் ஓய்வு பகுதியில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது என தெரியவந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் அதிகாரி Sharir Munawar தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!