Latestமலேசியா

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சா ஆ மக்களுக்கு பல்வேறு உதவிகள் தேவைப்படுகின்றன

ஜோகூர் பாரு, மார்ச் 9 – ஜோகூரில் ஏற்பட்டுள்ள வெள்ளம் சா ஆ வட்டாரத்தில் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ Ahmad Zahid Hamidi யின் இந்திய சமூகத்திற்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள அர்விந்த் அப்பளசாமி சா ஆ வட்டாரத்திற்கு நேற்று வருகை புரிந்து அங்குள்ள மக்களுக்கு உணவுப் பொட்டலங்களையும் வழங்கினார். அதோடு பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகனையும் அவர் கண்டறிந்தார்.

வெள்ளத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட சா ஆ தமிழ்ப்பள்ளியையும் அவர் பார்வையிட்டார். அப்பள்ளியில் சுமார் 300 மாணவர்கள் பயில்வதால் அவர்கள் அனைவருக்கும் சீருடைகள் வழங்குவதற்கான ஏற்பாடு செய்வதற்கும் அர்விந்த் முன்வந்தார். பள்ளி திறந்தவுடன் மாணவர்களின் சீருடைக்கான அளவுகளை தெரிவிக்கும்படியும் அவர் பள்ளி தலைமையாசிரியரை கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!