கோலாலம்பூர், மார்ச் 12 – பினாங்கு LRT இலகு இரயில் நிர்மாணிப்புத் திட்டம், கூடிய விரைவில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அத்திட்டம் தொடர்பான மிக அண்மைய தகவல்கள், இம்மாதம் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நிறைவடைவதற்குள் அறிவிக்கப்படுமென, RHB முதலீட்டு வங்கியின் ஆய்வாளர் ஆடாம் முஹமட் ரஹிம் கூறியுள்ளார்.
பினாங்கு LRT இலகு இரயில் திட்டம், நாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள மெகா அல்லது பெரிய மேம்பாட்டு திட்டங்களில் ஒன்றாகும்.
இன்னும் சில மாதங்களில் அதன் நிர்மாணிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பினாங்கு LRT திட்டத்தை தவிர்த்து, நாடு முழுவதும் வெள்ள நிவாரணத் திட்டம், MRT இலகு இரயில் திட்டங்களும் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளன.