தோக்யோ, டிச 16 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தோக்யோவில் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் பேச்சு நடத்தவிருக்கிறார். உள்ளூர் நேரப்படி காலை 11 மணியளவில் அன்வார் ஜப்பானிய பிரதமர் அலுவலகத்தில் ஃபுமியோ கிஷிடாவை சந்திப்பார்.
ஜப்பானுக்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டுள்ள பிரதமர் அன்வார் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மதிய உணவுக்கு பின் ஜப்பானின் மூன்று பன்னாட்டு நிறுவனங்களான ரோம் வகோ, தோஷிபா மற்றும் மிட்சுய் & கோ ஆகியவற்றின் உயர் அதிகாரிகளுடன் நேரடி பேச்சுக்களை நடத்துவார்.
அதன்பிறகு ஜப்பானிய தொழிலதிபர்களுடன் மாலை மணி 4.15 அளவில் வட்ட மேஜை மாநாட்டிலும் அன்வார் கலந்துகொள்வார்.