மலாக்கா, ஜனவரி 4 – மலாக்கா, புக்கிட் காட்டிலில், மூன்று மோட்டார் சைக்கிளோட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான சம்லவத்தில், ஒருவர் உயிரிழந்த வேளை ; இதர இருவர் படுகாயம் அடைந்தனர்.
இன்று அதிகாலை மணி 6.49 வாக்கில் அவ்விபத்து நிகழ்ந்ததாக, புக்கிட் காட்டில் தீயணைப்பு மீட்பு நிலையத்தின் நடவடிக்கை பிரிவு கமாண்டோ ரிட்சுவான் அஹ்மாட் தெரிவித்தார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள், கால்வாய் நிர்மாணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான மூன்று மோட்டார் சைக்கிளோட்டிகளையும் மீட்டனர்.
எனினும், அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளை; பலத்த காயங்களுக்கு இலக்கான இதர இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக, ரிட்சுவான் சொன்னார்.