கோலாலம்பூர், மார்ச் 29 – வரும் நோன்புப் பெருநாளுக்குக் கூடுதல் பொது விடுமுறை இருக்காது என பிரதமர் கோடி காட்டியுள்ளார்.
கூடுதல் விடுப்பு கிடைக்குமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, நமக்கு வேலை செய்யும் மனப்பான்மை இருக்க வேண்டும் என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சுருக்கமாகக் கூறினார்.
ஆக, ஹரி ராயாவுக்குக் கூடுதல் விடுமுறை இருக்காது என்பதை அவர் சூசகமாகக் கூறியிருப்பதாகவே தெரிகிறது.
இவ்வாண்டு நோன்புப் பெருநாள் ஏப்ரல் 10 புதன்கிழமை, ஏப்ரல் 11 வியாழக்கிழமை என வார நடுவில் கொண்டாடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எனவே, ஏப்ரல் 12 வெள்ளிக்கிழமையையும் அரசாங்கம் சிறப்பு விடுமுறை நாளாக அறிவித்தால், சனி ஞாயிறு சேர்த்து மொத்தமாக 5 நாட்கள் விடுமுறை அமைந்து, ஊருக்குக் போக வசதியாக இருக்குமே என்ற எதிர்ப்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.