கோலாலாம்பூர், நவ 24 – எம் .ஏ.சி.சி தொடர்பில் நிந்தனை அம்சத்தை கொண்ட அறிகைக்கையை வெளியிட்டதாக பெர்சத்து தலைவர் ரசாலி இட்ரிஸ் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
57 வயதுடைய திரெங்கானு ஆட்சிக் குழு உறுப்பினருமான ரசாலி தமக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்தார். நவம்பர் மாதம் 10ஆம் தேதி இரவு 9.30 மணிக்கும் 11.30 மணிக்குமியே சுக்கையிலுள்ள பாடாங் அஸ்தகாவில் பெரிக்காத்தான் நேனசல் தேர்தல் இயக்திரத்தை தொடக்கி வைத்த போது அவர் இக்குற்றத்தை புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார்.
எம்.ஏ.சி.சி. மற்றும் நீதிபதிகளை அரசாங்கம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கிஜால் சட்டமன்ற உறுப்பினருமான ரசாலி கூறியிருந்தார். மேலும், மூடா தலைவர் வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து ரசாலி கேள்வி எழுப்பியிருந்தார்.
கெடா மந்திரிபுசார் சனுசி நோருக்குப் பிறகு நிந்தனை குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் பெரிக்காத்தன் நேசனல் கூட்டணியின் இரண்டாவது தலைவராக ரசாலி விளங்குகிறார்.