Latestமலேசியா

கிளந்தானில் வெள்ளத்தில் மூழ்கிய 2ஆவது சிறுமியின் உடல் மீட்பு

கோத்தா பாரு, டிச 26 3- கிளந்தானில் வெள்ளத்தில் மூழ்கி மாண்ட இரண்டாவது சிறுமியின் உடல் இன்று மீட்கப்பட்டது. 11 வயதுடைய நூர் டாமியா கைசரா சபேரி சிறுமி ஞாயிற்றுக்கிழமையன்று மாலையில் ரெந்தாவ் பஞ்சாங், கம்போங் பெதாய் டுசுனில் தமது வீட்டிற்கு அருகே வெள்ள நீரில் விளையாடிக் கொண்டிருந்தபோது நீரினால் அடித்துச் செல்லப்பட்டார்.

நூர் டாமியாவின் உடல் பொதுமக்களால் கண்டுப்பிடிக்கப்பபட்டு பாசீர் மாஸ் மருத்துவமனைக்கு சவப் பரிசோதனைக்காக கொண்டுச் செல்லப்பட்டதாக பாசீர் மாஸ் போலீஸ் தலைவர் நிக் அமினுதீன் ராஜா அப்துல்லா தெரிவித்தார்.

தமது வீட்டிற்கு அருகே வெள்ளத்தில் மூழ்கிய இடத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இன்று காலை ஏழு மணியளவில் நூர் டாமியாவின் உடல் மீட்கப்பட்டது. அந்த சிறுமியுடன் வெள்ளத்தில் மூழ்கிய சித்தி அய்ஷா என்ற மற்றொரு சிறுமியின் உடல் பொதுமக்களின் உதவியினால் நேற்று மீட்கப்பட்டு தானா மேரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் பின்னர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!