Latestமலேசியா

ஆசிய குழு பேட்மிண்டன் போட்டியில் சிறந்த விளையாட்டை வெளிப்படுத்த லெட்சனா உறுதி

கோலாலம்பூர், ஜன 28 – எதிர்வரும் பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி தொடங்கி 18 ஆம் தேதிவரை செத்தியா ஆலமில் நடைபெறவிருக்கும் பெண்களுக்கான ஆசிய குழு பேட்மிண்டன் போட்டியில் சிறந்த விளையாட்டை வெளிப்படுத்துவதற்கு தேசிய மகளிர் குழுவில் இடம்பெற்றுள்ள லெட்சனா உறுதி பூண்டுள்ளார். உலகின் 60ஆவது ஆட்டக்காரராக கணிக்கப்பட்டுள்ள லெட்சனா  இப்போட்டியில் இடம்பெற்றுள்ள மலேசிய குழுவின் நம்பிக்கையளிக்கும் இளம் ஆட்டக்காரராக திகழ்கிறார். சீனாவில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் தாமஸ் மற்றும் உபேர் கிண்ண பேட்மிண்டன் போட்டிக்கு தகுதிபெறுவதற்கான போட்டியாக ஆசியன் பேட்மிண்டன் சாப்பியன்ஷீப் போட்டி அமைகிறது. இப்போட்டியில் பங்கேற்பதில் தாம் மிகவும் ஆர்வமாக இருப்பதோடு மலேசிய குழுவின் வெற்றிக்காக தமது முழு திறனையும் வெளிப்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இப்போட்டிக்கு மனோரீதியிலும் உடல் ரீதியியிலும் தயாராகுவதற்கு தாம் தீவிர முனைப்பு காட்டி வருவதாக லெட்சனா தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!