Latestமலேசியா

கார் ‘பம்பரில்’ ஆணி; ஷா ஆலாமில், மறைந்திருந்து நோட்டமிட்ட இரு ஆடவர்கள் குறித்து பெண் எச்சரிக்கை

ஷா ஆலாம், ஜனவரி 3 சிலாங்கூர், ஷா ஆலாமிலுள்ள, பேரங்காடி ஒன்றுக்கு, தனது தோழியுடன் பொருட்களை வாங்க சென்ற பெண் ஒருவர், ஆபத்தான தருணத்தை எதிர்கொள்ள நேரிட்டது.

அவர்களின் கார் பம்பரில் ஆணியை வைத்ததாக நம்பப்படும் இருவர், பின் தொடர்ந்து, மறைந்திருந்து அவர்களை நோட்டமிட்டதே அதற்கு காரணம் ஆகும்.

இம்மாதம் இரண்டாம் தேதி, நிகழ்ந்த அச்சம்பவத்தை, @adlinakml எனும் X சமூக ஊடக கணக்கில் அப்பெண் பதிவிட்டுள்ளார்.

பிளாசா மசாலம் (Plaza Masalam) அருகேயுள்ள, கார் நிறுத்துமிடத்தில், சந்தேகிக்கும் வகையில், சிலர் நடமாடியதையும், தனது காரில் ஆணி குத்தி இருப்பதையும் கண்டதாக அப்பெண் கூறியுள்ளார்.

காரை திறந்து அவர்கள் அமர்ந்தவுடன், அருகிலுள்ள, மரம் ஒன்றுக்கு பின்னால் மறைந்திருந்த இரு ஆடவர்கள், அப்பெண்ணின் காரை நோக்கி வந்துள்ளனர்.

எனினும், அப்பொழுது அங்கு வேறு சில கார்கள் வந்ததால், அவ்விரு ஆடவர்களும் அப்பெண்ணின் காரின் பின்புறம் நிற்பதை போல பாசாங்கு செய்துள்ளனர்.

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, அப்பெண் காரை இயக்கி அங்கிருந்து வெளியேறியதாக பதிவிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட பெண்களை கடத்த அல்லது கொள்ளையிட, அந்த ஆடவர்கள் ஆணியை பயன்படுத்தி இருக்கலாம் என இணையப் பயனர்கள் பலர் ஊகங்களை வெளியிட்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!