கோலாலம்பூர், பிப் 28 – டான்ஸ்ரீ முஹைதீன் யாசினுக்கு எதிரான அதிகார துஷ்பிரயோகம் மீதான நான்கு குற்றச்சாட்டுக்களை மேல் முறையீட்டு நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியுள்ளளது. அந்த குற்றச்சாட்டில் குறைபாடு இருப்பதாக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் உயர்நீதிமன்றம் சட்டத்தில் தவறு செய்துவிட்டதாக மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஹதரியா சையத் இஸ்மாயில் ஏகமனதாக தீர்ப்பளித்தார். இந்த முடிவினால் முன்னாள் பிரதமருமான முஹிடின் யாசின் கூட்டரசு நீதிமன்றத்தில் முறையீடு செய்யத் தவறினால் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெறும்.
கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, தீர்ப்பிற்கு தடை விதிக்காத பட்சத்தில், கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர இந்தத் தீர்ப்பு வழிவகை செய்கிறது. முஹடினுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தெளிவாக இருப்பதால் இது குறித்து மேல் விவரங்கள் தெரிவிக்க வேண்டிய அவசியல்லையென பெர்சத்து எம்.பி.க்கள் மற்றும் ஆதரவாளர்களால் நிரம்பிய நீதிமன்ற அறையில் நீதிபதி ஹதரியா சையத் இஸ்மாயில் தீர்ப்பளித்தார். மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் மூன்று பேர் கொண்ட குழுவில் நீதிபதிகள் அஸ்மின் அரிபின் மற்றும் கோமதி சுப்பையா ஆகியோர் இருந்தனர்.