கிள்ளான், டிச 7 – கிள்ளான், கம்பன் பெண்டாமரிலுள்ள ஒரு வீட்டில் குளியல் அறை தொட்டிக்குள் சிமெண்ட பூசப்பட்ட நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்ட பெண் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமார் கான் உறுதிப்படுத்தினார்.
அந்த பெண்ணின் உடலில் மேற்கொள்ளப்பட்ட சவப் பரிசோதனையில் இது தெரிய வந்திருப்பதாக அவர் கூறினார். இந்த கொலை தொடர்பில் பல்வேறு கோணங்களில் தாங்கள் விசாரணையை மேற்கொண்டதாக ஹுசைன் ஓமார் கான் தெரிவித்தார்.
மீட்கப்பட்ட பெண்ணின் உடலில் நேற்று கிள்ளான் பொது மருத்துவமனையில் சவப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இதற்கு முன் தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் சா ஹூங் ஃபாங் தெரிவித்தார்.
கொல்லப்பட்ட பெண் 20 முதல் 30 வயதுக்குப்பட்டவர் என போலீசார் மேற்கொண்ட முன்னோடி விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது உடல் மீட்கப்பட்டபோது மோசமாக அழுகிய நிலையில் இருந்ததால் அவர் சரியான மரணம் அடைந்த தேதி மற்றும் நேரத்தை தடயயியல் நிபுணர்களால் கண்டறியமுடியவில்லை.
அதோடு அந்த பெண்ணின் அடையாளமும் இன்னும் கண்டறியப்படவில்லை. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 53 வயதுடைய வெளிநாட்டு பிரஜை ஒருவர் ஏழு நாட்களுக்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.