வாஷிங்டன், மார்ச் 6 – மலேசியா உட்பட உலக அளவில் மெட்டா நிறுவனத்தின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதள சேவை, நேற்று இரவு முடங்கின.
இதனால் பயனர்கள் சம்பந்தப்பட்ட தளங்களின் சேவையை இரண்டு மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்த முடியாமல் அவதி அடைந்தனர்.
பயனர்களின் கணக்கு, செயலியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் உள்நுழைவதில் சிரமம் ஏற்பட்டதையும் பயனர்கள் தெரிவித்துள்ளனர்.
முகநூல், இன்ஸ்டாகிராம் முடங்கியதைத் தொடர்ந்து X தளத்தில் பயனர்கள் பலர் ஒரே நேரத்தில் குவியத்தொடங்கியுள்ளதாக கேலியாக பலர் விடியோக்களை வெளியிட்டுள்ளனர்.
இதற்கிடையில், டவுன்டிடெக்டர் எனப்படும் கருவியில் கண்காணிப்பு கருவியின் தரவுகளின்படி, ஆயிரத்துக்கும் அதிகமான புகார்கள் இது குறித்து பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.