Latestமலேசியா

சரவாக்கில், கால்வாயில் இறந்து கிடக்க காணப்பட்ட 15 வயது பதின்ம ஆடவனின் சடலம் மீட்பு

கூச்சிங், டிசம்பர் 15 – சரவாக், மருடியில், கால்வாய் ஒன்றில், 15 வயது பதின்ம வயது இளைஞன் ஒருவன் இறந்து கிடக்கக் காணப்பட்டான்.

நேற்று காலை மணி 7.20 வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

15 வயது கால்ரோனெய் சார்ச்லி என அடையாளம் காணப்பட்டிருக்கும் அந்த இளைஞன், கால்வாயில் விழுந்து கிடப்பதை கண்டு பொதுமக்கள் தீயணைப்பு மீட்புத் துறைக்கு தகவல் வழங்கியதாக கூறப்படுகிறது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள், அந்த இளைஞனை மீட்டு கால்வாயிலிருந்து வெளியே கொண்டு வந்தனர்.

எனினும், அந்த ஈபான் இளைஞன் இறந்து விட்டதை, மருடி மருத்துவமனையில் மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

கால்வாயில் அந்த இளைஞனுடன் மோட்டர் சைக்கிள் ஒன்றும் இருந்ததால், அச்சம்பவத்துக்கான காரணத்தை கண்டறிய போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!