Latestமலேசியா

கெத்தும் பானம் வைத்திருந்த குற்றத்திற்காக 4 போலிஸ் அதிகாரிகள் கைது

கோலாலம்பூர், ஜன 7 – தாமான் யூன் லாயில் உள்ள வீடொன்றில் கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் கெத்தும் பானம் வைத்திருந்த குற்றத்திற்காக கோலாலம்பூர் போலிஸ் படையைச் சேர்ந்த 4 போலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

இத்தகவலை உறுதிப்படுத்திய புக்கிட் அமானின் நம்பகத்தன்மை மற்றும் நெறிமுறை உறுதிப்படுத்தல் பிரிவின் இயக்குனர் டத்தோஸ்ரீ அஸ்ரி அஹ்மட், இதுகுறித்து மேல் விவரங்கள் எதனையும் வெளியிடவில்லை.

கைதான அதிகாரிகள் 25 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதோடு மாவட்ட போலிஸ் தலைமையகம் ஒன்றில் அலுவலக அதிகாரிகளாக பணிபுரிகிறார்கள்.

போலிஸ் இது குறித்து மேல் விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!