கோலாலம்பூர், ஜன 1 – நாட்டில் தேசிய ஒற்றுமையும் ஐக்கியமும் தொடர்வதற்கு பிரார்த்திப்பதாக மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா மற்றும் பேரரசியார் துங்கு அசிசா அமினா மைமூனா தெரிவித்திருக்கின்றனர்.
ஒட்டுமொத்த நாடும் சுபிட்சத்தையும் நன்மையையும் பெற வேண்டும் என்பதோடு எந்தவொரு பேரிடர்கள் மற்றும் பருவநிலை மாற்றத்திலிருந்து நாட்டை பாதுகாப்பதற்கு இறைவன் அருள் புரிய வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
அனைவரும் நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டும் என்பதோடு நாட்டில் ஐக்கியம் தொடர வேண்டும் என தங்களது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் அரச தம்பதியர் கேட்டுக்கொண்டனர்.