Latestமலேசியா

பினாங்கு பாலத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து; 17 வயது பையன் பலி

பட்டவொர்த், மார்ச் 11 – பினாங்கு பாலத்தில் நிகழ்ந்ந விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டியான 17 வயது பையன் மரணமடைந்த வேளை, பின்னால் அமர்ந்திருந்த 15 வயது பெண் படுகாயம் அடைந்தார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 4.38 மணியளவில் பிறையை நோக்கிச் செல்லும் சாலையின் 2.8-வது கிலோ மீட்டரில் அவ்விபத்து நிகழ்ந்தது.

சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிள் தடம்புரண்டு சாலைத் தடுப்புச் சுவரை மோதியது.

அதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு, எதிர்புறச் சாலையில் விழுந்தனர்.

அப்போது எதிரே வந்த வாகனம் இருவரையும் மோதித் தள்ளியதில், மோட்டார் சைக்கிளோட்டி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காயமுற்ற 15 வயதுப் பெண் பிள்ளை பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவ்விபத்து காரணமாக பினாங்கு பாலத்தின் இரு வழிப் பாதைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் போலீசைத் தொடர்புக் கொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!