கோலாலம்பூர், பிப் 28 – அடுத்த ஆண்டு அமல்படுத்தவிருக்கும் பொதுச் சேவைத்துறைக்கான புதிய சம்பள திட்டத்தை தொடர்ந்து ஓய்வூதியம் ரத்துச் செய்யப்படுவதால் மருத்துவ பட்டதாரிகள் பொதுச் சேவைத்துறையில் தொடர்ந்து சேவையாற்றிவருவதை கவர்வதற்கான அரசாங்கத்தின் திட்டம் குறித்து இன்றைய நாடாளுமன்ற கூட்டம் கவனம் செலுத்தும் . வாய்மொழி கேள்விக்கு பதில் தெரிவிக்கும் இன்றைய நாடாளுன்ற நடவடிக்கையில் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ Dzulkefly Ahmad ட்டிடம் Kuala Nerus பெரிக்காத்தான் நேசனல் உறுப்பினர் டத்தோ டாக்டர் Alias Razak கேள்விகளை கேட்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டில் 2025ஆம் ஆண்டிற்குள் 10,000 மின்சார கார்களுக்கான பெட்டரி சார்ஜ் செய்யும் மையங்களுக்கு இலக்கை கொண்டிருக்கும் அரசாங்கம் அதனை எப்படி அமல்படுத்தவிருக்கிறது என்பது குறித்த கேள்விக்கு அனைத்துலக வாணிக தொழில்துறை அமைச்சர் Tenku Zafrul tengku Abdul Aziz விளக்கம் அளிப்பார். வாய்மொழி கேள்விகள் மற்றும் அதற்கு பதில் அளிக்கும் அங்கம் முடிவுற்ற கையோடு அரச உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதங்கள் இன்றறைய நாடாளுமன்ற கூட்டத்தில் தொடரும்.