ஜோகூர் பாரு, ஜன 21 – ஒரு நிறுவன மேலாளர் தனது இளைய சகோதரனாகக் காட்டி மோசடி செய்தவரால் 570,174 ரிங்கிட்டை இழந்தார். 31 வயதான அந்தப் பெண், தான் பணத்தை மாற்றியதைத் தெரிவிக்க தனது சகோதரனிடம் தொடர்பு கொண்ட பிறகே தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார் என இஸ்கண்டார் புத்ரி போலீஸ் தலைவர் துணை ஆணையர் ரஹ்மாட் ஆரிஃபின் தெரிவித்தார். அதற்குப் பதிலாக பணப்பட்டுவாடா கோரிக்கைகள் எதுவும் தெரிவிக்கவில்லையென அப்பெண்ணின் சகோதரன் கூறியதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இஸ்கண்டார் புத்ரி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளதாக ரஹ்மாட் ஆரிஃபின் தெரிவித்தார். அந்த பெண்ணுக்கு முதலில் வாட்ஸ்அப் மெசேஜ் வந்தது. தனது சகோதரனிடம் இருந்து தொலைபேசி வந்ததாக அப்பெண் நம்பினார் . தனது சகோதரன் வேறு தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தியிருக்கலாம் என்பதோடு ரு வணிக பரிவர்த்தனைக்கு வசதியாக 570,174 ரிங்கிட்டை மாற்றும்படி கேட்டுக்கொண்டதாக அப்பெண் நம்பி பணப் பட்டுவாடா செய்துள்ளார்.
அதன்பின் தனது சகோதரரை தொடர்பு கொண்டபோது பணம் எதனையும் கேட்கவில்லையென அவர் தெரிவித்தவுடன் அப்பெண் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளானார் என்று ரஹ்மாட் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். மோசடி குற்றத்திற்காக குற்றவியல் சட்டம் பிரிவு 420 இன் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்தி அல்லது தொலைபேசி தகவல்களை எளிதில் நம்ப வேண்டாம் என்று ரஹ்மாட் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.