Latestமலேசியா

10 மில்லியன் அமெரிக்க டாலர் கோரிக்கையுடன் MAHB அமைப்பு ஹேக் செய்யப்பட்டது – அன்வார்

கோலாலம்பூர், மார்ச் 25 – MAHB எனப்படும் மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் அமைப்பு 10 மில்லியன் அமெரிக்க டாலர் கோரிக்கையுடன் ஹேக் செய்யப்பட்டது அல்லது ஊடுவப்பட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார். எனினும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என அவர் கூறினார்.

இது குறித்து தெரிவிக்கப்பட்டபோது, ​​நான் காத்திருக்கவில்லை, ஐந்து வினாடிகளில் நான் உடனடியாக குற்றவாளியின் கோரிக்கைகளை ஏற்க முடியாது என்று பதிலளித்ததாக அவன்வார் கூறினார். நேற்று நாங்கள் இணைய தாக்குதல்கள் மற்றும் அதன் ஊடுருவல் பற்றி பேசினோம் என இன்று கோலாலம்பூர் போலீஸ் பயிற்சி மையமான Pulapol லில் 218வது போலீஸ் தின நினைவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அன்வார் தெரிவித்தார்.

கடந்த ஓரிரு நாட்களில் MAHB-க்கு மிகவும் கடுமையானதாக இருந்தது. எனவே எப்படி தீர்ப்பது என்பது குறித்த விவாதத்தில் ஹேக்கர்கள் 10 மில்லியன் டாலர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நிதியைப் பெறுவதற்கான கோரிக்கைகளையும் முன்வைத்தனர் என்று அவர் கூறினார். உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுடியோன் இஸ்மாயில் (Saifuddin Nasution Ismail ). தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ பாமி பாட்சில் மற்றும் போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் உசேய்ன் ( Razarudin Husain ) ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மலேசியாவின் தலைமையும் அமைப்பும் நாட்டிற்குள் அல்லது வெளியே குற்றவாளிகள் மற்றும் துரோகிகளின் இறுதி எச்சரிக்கைக்கு அடிபணிய அனுமதித்தால், மலேசியா பாதுகாப்பாக இருக்க முடியாது. ஹேக்கரின் கோரிக்கைகளுக்கு அடிபணியாத செயல் சந்தேகத்திற்கு இடமின்றி அரசாங்கத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியது. ஆனால் இது வங்கித் துறை உட்பட அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை நிரூபித்துள்ளது என அன்வார்  தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!