Latestமலேசியா

1 லட்சம் ரிங்கிட்டுக்கும் மேல் நீர் கட்டணத்தை செலுத்தாமல் இருக்கும் புத்ரா ரியா குடியிருப்புவாசிகள்

கோலாலம்பூர், பிப் 23 – தலைநகரில் உள்ள , Putra Ria அடுக்குமாடி குடியிருப்புக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டிருப்பதை அடுத்து, அந்த குடியிருப்பின் நிர்வாகத்துடனும் , Air Selangor நிறுவனத்துடனும் சந்திப்பு நடத்தப்படுமென, தொடர்பு – இலக்கவியல் அமைச்சர் Fahmi Fadzil தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட குடியிருப்புக்கான 1 லட்சத்து 70,000 ரிங்கிட்டுக்கும் அதிகமான நீர் கட்டணம் செலுத்தப்படாமல் நிலுவையில் இருப்பதை அடுத்து, அப்பகுதிக்கான நீர் விநியோகத்தை , Air Selangor நிறுவனம் துண்டித்திருப்பதாக, லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான Fahmi Fadzil குறிப்பிட்டார்.

அதோடு, அந்த குடியிருப்பில் உள்ள 358 வீடுகளில் வசிப்பவர்கள் , குடியிருப்பின் நிர்வாகத்துக்கு, 24 லட்சம் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட பராமரிப்புக்கான கட்டணத்தையும் செலுத்தாமல் இருக்கின்றனர்.

அதிகமானோர் அந்த கட்டணத்தை செலுத்தாமல் இருப்பதை அடுத்து, அப்பகுதி மக்களுடனும் சந்திப்பு நடத்தப்படுமென அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!