கோலாலம்பூர், நவ 7 – கோழி விலை இன்னமும் கட்டுப்பாட்டில் இருப்பதோடு அதன் விநியோகமும் போதுமானதாக இருப்பதாக விவசாயம் மற்றும் உணவு உத்தரவாதத்துறை துணையமைச்சர் டத்தோ சான் போங் ஹின் தெரிவித்திருக்கிறார்.
கோழியின் உச்சவரம்பு விலை ரத்துச் செய்யட்டது நவம்பர் 1ஆம் தேதி அமலுக்கு வந்தது முதல் கோழி விலை சந்தையின் நிலைக்கு ஏற்ப இருப்பதை கண்டறிவதற்காக சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் புத்ரா ஜெயா ஆகிய இடங்களில் அன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கோழி விலை கட்டுப்பாட்டில் இருந்ததை கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.
கோழி இறைச்சியின் விலை ஒரு கிலோவுக்கு 7 ரிங்கிட் 39 சென்னுக்கும், 9 ரிங்கிட் 40 சென் வரைக்குமிடையே இருந்ததாக சான் போங் ஹின் கூறினார். கோழி விநியோகமும் அதன் விலையும் தொடர்ந்து கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.