கோலாலம்பூர், ஏப்ரல் 3 – மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவான மித்ரா, மீண்டும் பிரதமர் துறைக்குத் திரும்புவதாக இன்றைய அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார் தகவல் துறை அமைச்சர் ஃபாமி பாட்சில்.
இந்த முடிவு பிரதமர் அன்வார் இப்ரஹிமும் ஒற்றுமை துறை அமைச்சர் ஏரன் அகோ டகாங் (Aaron Ago Dagang) இருவரும் ஒருசேர இணைந்து முடிவெடுத்ததாக ஃபாமி தெரிவித்தார்.
பிரதமர் தன்னுடைய நேரடிப் பார்வையின் கீழ் மிற்றாவைக் கொண்டு வந்து, இந்திய சமூகத்தின் உருமாற்றுத் திட்டங்கள் எதிர்பார்த்த பலனை தரும் வகையில் செயல்படுவதை உறுதி செய்யும் நோக்கி இம்முடிவு எடுக்கப்பட்டதாக ஃபாமி குறிப்பிட்டார்.
2018ஆம் ஆண்டு ஒற்றுமை துறை அமைச்சின் கீழ் மாறிய மித்ராவை 2022 செப்டம்பரில் பிரதமத் துறைக்கு மாற்றினார் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி.
அதன் பின்னர், கடந்த ஆண்டு டிசம்பர் மித்ரா மீண்டும் ஒற்றுமை அமைச்சுக்கு மாறுவதாக பிரதமர் அன்வார் அறிவித்திருந்தார்.
சமீபக் காலமாக பல்வேறு குறை கூறல்களுக்கு உள்ளான மித்ரா, இன்று மீண்டும் பிரதமர் துறைக்கு மாறி இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.