
பாலிங், ஏப் 29 – Kedah வில் Sungai Limau நீர்த் தேக்கத்திற்கு அருகே ஆற்றில் வழுக்கி விழுந்த 10 வயது சிறுவன் மூழ்கி உயரிழந்தான். பெட்டாலிங் ஜெயாவைச் சேர்ந்த Yusuf Khairuddin என்ற அந்த சிறுவனன் தமது குடும்பத்தாருடன் நேற்று காலை 11 மணியளவில் அந்த நீர்த் தேக்கப் பகுதிக்கு பொழுதை கழிக்கச் சென்றபோது அந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தாக Baling மாவட்ட போலீஸ் தலைவர் Shamsuddin Mamat தெரிவித்தார். அந்த சிறுவன் ஆற்றில் விழுந்த இடத்திலிருந்து 3 கிலோமீட்டருக்கு அப்பால் அவனது உடலை தீயணைப்பு மீட்புத்துறையினர் மீட்டதாக அவர் கூறினார்.