ரொம்பின், பிப்ரவரி 28 – பஹாங் ரொம்பினில் பெட்ரோல் நிலையமொன்றில் பூட்டியிருந்த காருக்குள் இருந்து ஆணும் பெண்ணுமாக இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
முவாட்சாம் ஷா அருகே செவ்வாய்க்கிழமை மாலை அச்சம்பவம் நிகழ்ந்தது.
தகவல் கிடைத்து, 6 தீயணைப்பு மீட்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
கார் கதவை உடைத்த போது அதனுள் ஆடவரும் பெண்ணும் மூர்ச்சையாகிக் கிடந்தனர் என்று மாநில தீயணைப்பு மீட்புத் துறையின் பேச்சாளர் தெரிவித்தார்.
இருவரும் மரணமடைந்து விட்டதை மருத்துவப் பணியாளர்கள் உறுதிப்படுத்தியதை அடுத்து, மேல் விசாரணைக்காக சடலங்கள் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டன.