Latestமலேசியா

பந்திங்கில், ‘பிச்சைக்காரர்’ கார் கதவை திறக்க முயலும் காணொளி வைரல்; சுற்று வட்டார மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல்

கோலாலம்பூர், ஜனவரி 17 – சிலாங்கூர், பந்திங்கில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றின் கதவை, பிச்சைக்காரர் ஒருவர் திறக்க முயலும் காணொளி ஒன்று, சமூக ஊடகத்தில் விவாதத்தை தூண்டியுள்ளது.

அந்த காணொளியை, அக்காரின் உரிமையாளர், @MALAYSIAVIRALLL எனும் X சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்ததை தொடர்ந்து வைரலாகியுள்ளது.

“ஏன் இந்த ரோஹிங்யா காரின் கதவை இவ்வளவு நேரம் பிடித்துக் கொண்டு நிற்கிறார்? பயமாக இருக்கிறது” என அந்த காணொளிக்கு கீழ் பதிவிடப்பட்டுள்ளது.

அதோடு, “அவரது கை மற்றும் முகத்தை பார்த்தால், பெண் போல தெரியவில்லை. ஆண் ஒருவன் பெண் போல ஆள்மாறாட்டம் செய்வதை போல உள்ளது” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த 17 வினாடி காணொளியில், தூடோங்கும், முகக் கவசமும் அணிந்துள்ள பெண், காரின் காதவை பிடித்துக் கொண்டு நிற்கிறார்.

சம்பவத்தின் போது, கருப்பு வில்லை ஒட்டப்பட்டிருந்த அந்த காரின் உள் இருந்த அதன் உரிமையாளர், அந்த காட்சியை பதிவுச் செய்ததாக கூறப்படுகிறது.

அனுதாபத்தை ஈட்ட ஏதுவாக ஆண் ஒருவன் பெண்ணை போல ஆள்மாறாட்டம் செய்து பிச்சை எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என இணையப் பயனர்கள் சிலர் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

எனினும், பந்திங்கில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுவதால், சுற்று வட்டார மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அதில் சிலர் அறிவுறுத்தியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!