மலாக்கா, ஜன 30 – மூன்று சந்தேகப் பேர்வழிகளை கைது செய்ததன் மூலம் போதைப் பொருள் கும்பலை முறியடித்த மலாக்கா போலீசார் 650,000 ரிங்கிட்டிற்கும் மேலான போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். மாலிம் , தாமான் சாகாவில் 27 வயதுடைய உள்நாட்டு ஆடவருடன் , இரண்டு தாய்லாந்து பெண்களும் கைது செய்யப்பட்டதாக மலாக்கா மாநில போலீஸ் துணைத் தலைவர் SAC மாட் நஸ்ரி நவாவி தெரிவித்தார்.
அவர்களிடமிருந்து திரவமய கெத்தாமின், போதை மாத்திரைகள், கெத்தாமின் பவுடர், மற்றும் பரவச போதை மாத்திரைகளின் பவுடர்களும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஒரு துப்பாக்கி, கார், நகை மற்றும் 803 ரிங்கிட் ஆகியவவையும் பறிமுதல் செய்யப்பட்டதோடு விசாரணைக்கு உதவும் பொருட்டு அவர்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மாட் நஸ்ரி தெரிவித்தார்.