Latestமலேசியா

விண்ணைப் பிளக்கும் வானரங்கச் சொற்போர்: இந்திய அணி வெற்றி, 2வது இடத்தை இலங்கை பெற்றது

கோலாலம்பூர், நவ 2 – மலேசிய திரெங்கானு பல்கழைக்கழம், திரெங்கானு மாநில மலேசிய இந்திய இளைஞர் மன்றம், வணக்கம் மலேசியா ஒருங்கிணைப்பில் விண்ணைப் பிளக்கும் வானரங்கச் சொற்போர் போட்டியில் இந்திய குழுவைச் சேர்ந்த பாலு ஆனந்த் , கோபால கிருஷ்ணன், தினேஷ் பாபு, ஹேமாவதி ஆகியோர் முதல் இடத்தைப் பெற்று மூலம் 3,000 ரிங்கிட் தொகையை பரிசாக வென்றனர்.

இறுதிப்போட்டியில் இந்திய குழுவுக்கு கடுமையான போட்டியை வழங்கிய இலங்கை அணியைச் சேர்ந்த அஜிந்தன், ஜிஃப்னா, பிரதாயினி , மயூரேசன் ஆகியோர் இரண்டாவது இடத்தைப் வென்றனர். இவர்கள் 2,000 ரிங்கிட்டை பரிசாக பெற்றனர்.

சொல்லை வில்லாக கொண்டு இறுதிச் சுற்றின் சிறந்த பேச்சாளர் என்ற அங்கீகாரத்தை இலங்கையைச் சேர்ந்த மயூரேசன் தட்டிச் சென்றார்.

இந்த சொற்போர் போட்டியில் மூன்றாவது இடத்தை மற்றொரு இலங்கை அணியும் , நான்காவது இடத்தை இந்திய அணியும் பெற்றனர்.

இந்தியா, இலங்கை, மலேசியா என 3 நாடுகளிருந்து 28 அணிகள் இந்த போட்டியில் கலந்து கொண்ட இவ்வாண்டுக்கான இந்த அனைத்துலக ரீதியிலான போட்டி மிகச் சிறப்பாக நடைப்பெற்றது.

திரங்கானு மந்திரிபெசாரின் இஸ்லாமியர் அல்லாத சிறப்பு நலப் பிரிவின் அதிகாரி Dr. பாலச்சந்திரன் கோபால கிருஷ்ணன் சிறப்புரையாற்றி இந்த இறுதிப்போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த நிலையில் இந்த சொற்போர் போட்டியில் தலைமை நடுவராக இரா கனல்வீரன், திருமாவளவன் ஆகியோர் செயல்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!