Latestமலேசியா

ஜோகூர் பாருவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 137 வெளிநாட்டுப் பெண்கள் கைது

ஜோகூர் பாரு, டிச 27 – ஜோகூர் பாருவில் போலீசார் மேற்கொண்ட Ops Noda சோதனை நடவடிக்கையில், விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் என நம்பப்படும் 137 அந்நிய நாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜோகூர் பாருவில் உள்ள கேளிக்கை மையங்களில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 12:00 மணிக்கு தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை காலை 6:30 மணி வரையில் மேற்கொள்ளபட்ட இந்த சோதனையில் ஒழுங்கீன நடவடிக்கைகளில் அவர்கள் அனைவரும் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதவிர இப்பெண்களை நிர்வகித்து வந்தவர்கள் உட்பட கேளிக்கை மையங்களின் நிர்வாகிகள் என மேலும் 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலிஸ் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அவர்களில் இருவர் போதை மருந்துகள் உட்கொண்டிருந்ததும் கண்டறியப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!