Latestமலேசியா

3.80 மில்லியன் மலேசியர்கள் பாடு தரவுத் தளத்தில் பதிந்து கொண்டுள்ளனர்

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 26 – பாடு தரவுத் தளத்தில், நேற்று வரை பதிந்து கொண்டுள்ளவர்களின் எண்ணிக்கை 38 லட்சம் பேராக அதிகரித்துள்ளது.

பாடு முகநூல் பதிவில் அந்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், நேற்று பிப்ரவரி 25-ஆம் தேதி, பின்னிரவு மணி 11.59 வரையில், பாடு தரவுத் தளத்தில் இடம் பெற்றுள்ள மூன்று கோடி மலேசியர்களில், 38 லட்சம் பேர் தங்கள் சுய விவரங்களை பதிந்து கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.

அதில், முறையே சிலாங்கூர், சரவாக், ஜோகூர், பேராக், சபா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்களே மிக அதிகமாக பதிந்து கொண்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!