Latestமலேசியா

இணைய ஆள்மாறாட்ட கும்பல் ; சிரம்பானில், RM480,000 இழந்தார் பணி ஓய்வுப் பெற்ற ஆசிரியர்

சிரம்பான், டிசம்பர் 7 – நெகிரி செம்பிலான், சிரம்பானை சேர்ந்த பணி ஓய்வுப் பெற்ற பெண் ஆசிரியர் ஒருவர், அண்மையில், இணைய ஆள்மாறாட்ட கும்பலிடம், தனது நான்கு லட்சத்து 80 ரிங்கிட் பணத்தை பறிகொடுத்தார்.

அச்சம்பவம் தொடர்பில், அந்த 56 வயது பெண், நேற்று போலீஸ் புகார் செய்ததை, சிரம்பான் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் அரிபாய் தராவே உறுதிப்படுத்தினார்.

நவம்பர் 15-ஆம் தேதி, பொருட்களை விநியோகிக்கும் கூரியர் நிறுவனத்தின் பணியாளர் எனவும் போலீஸ் எனவும் தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட நபர்களிடமிருந்து, அப்பெண் தொலைபேசி அழைப்பை பெற்றுள்ளார்.

சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அனுப்பப்பட்ட சட்டவிரோத பொட்டலம் ஒன்றில், அடையாள அட்டையும், காசோலை புத்தகமும் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். சட்ட நடவடிக்கைக்கு அஞ்சி, வங்கி விவரங்கள் உட்பட அவர்கள் கேட்ட அனைத்து தரவுகளையும் அப்பெண் வழங்கியுள்ளார்.

எனினும், பின்னர் சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து, வங்கிக் கணக்கை சோதனையிட்ட அப்பெண், அதிலிருந்து நான்கு லட்சத்து 80 ஆயிரம் ரிங்கிட் பணம் மீட்கப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ந்து போனார்.

அச்சம்பவம், குற்றவியல் சட்டத்தின் 420-வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!