கோலாலம்பூர். டிச 1 – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் சிறையில் பி.எச்.டி கல்வியை தொடர்வதாக அவரது வழக்கறிஞர் டான்ஸ்ரீ முஹம்மட் ஷஃபீ அப்துல்லா தெரிவித்திருக்கிறார். நஜீப்பின் படிப்பு மற்றும் அவரது ஆய்வுக்கான கட்டுரைகள் மற்றும் நூல்களை அவரது உதவியாளர் சிறைச்சாலைக்கு கொண்டுவருவார். எனினும் சிறை அதிகாரிகளின் கடுமையான பரிசோதனைக்குப் பின்னரே அந்த புத்தகங்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் அவருக்கு வழங்கப்படுவதாக முஹம்மட் ஷஃபீ அப்துல்லா கூறினார்.
சிறையில் பயன்தரக்கூடிய ஒரு பணியில் அவர் ஈடுபட்டு வருவது குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக முஹம்மட் ஷஃபீ தெரிவித்தார். முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடினும் அம்னோவின் முன்னாள் தகவல் பிரிவு தலைவர் ஷஹரில் ஹம்டானும் நடத்திவருமம் “Podcast Keluar Sekejap” வானொலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது முஹம்மட் ஷஃபீ இத்தகவலை வெளியிட்டார்.