Latestஉலகம்

10 நாட்களில் 5 பெண்கள் அறிமுகமானவர்களால் படுகொலை ஆஸ்திரேலிய மக்கள் அதிர்ச்சி

பிரிஸ்பெர்ன், நவ 6 – தங்களுக்கு அறிமுகமான ஆடவர்களால் கடந்த 10 நாட்களில் அடுத்தடுத்து 5 பெண்கள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பனேனில் கொலை செய்யப்பட்டது குறித்து அங்குள்ள மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

கொலை செய்யப்பட்டவர்களில் ‘Water Polo’ விளையாட்டின் பயிற்சியாளரான 21 வயது பெண்ணும் அடங்குவார். அவரை கொலை செய்ததாக நம்பப்படும் சந்தேகத்திற்குரிய கொலையாளி அந்த பெண்ணிடமிருந்து பிரிந்தவர் என கூறப்படுகிறது. ஆகக்கடைசியாக 34 வயதுடைய பெண் வழக்கறிஞரான ஆலிஸ் மக்சேரா கடந்த திங்கட்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.

பெர்த்திலுள்ள கிரௌன் ஹோட்டலில் உள்ள அறையில் அந்த பெண் இறந்து கிடந்தார் என போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோப் தேசாங்ஸ் தெரிவித்தார். சொந்தமாக காயம் விளைவித்துக் கொண்டதாக நம்பப்படும் 42 வயது ஆடவன் ஒருவனையும் அந்த அறையில் கண்டுப்பிடித்தனர்.

அந்த ஆடவன் மீது கொலைக் குற்றஞ்சாட்டு கொண்டுவரப்பட்டது. கடந்த
ஞாயிற்றுக்கிழமையன்று 46 வயதுடைய பெண் ஒருவர் தமது வீட்டில் காயங்களால் இறந்துகிடந்தார். அந்த பெண்ணை கொலை செய்ததாக அவரது 44 வயது கணவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!