Latestமலேசியா

2020 ஆண்டு முதல் 200,000த்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்தனர். – சிவக்குமார்

2020 ஆம் ஆண்டு முதல் 200,000 த்திற்கும்  மேற்பட்டோர்  வேலையிழந்திருப்பதாக  மனிதவள அமைச்சர்    வி.சிவக்குமார்  நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டு முதல்  இவ்வாண்டு  பிப்ரவரி  28 ஆம் தேதிவரை  209, 903 தொழிலாளர்கள் வேலையிழந்திருப்தை வேலை காப்புறுதி  திட்டமான  SIP – யின் புள்ளி விவரங்கள் தெரிவிப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். அவர்களில்  47,168 பேர் தயாரிப்பு தொழில்துறையிலும்,  சில்லறை மற்றும்  வாகன பழுதுபார்க்கும் துறையிலிருந்து  31,434 பேரும் , தங்குமிடம் , கேட்டரிங் துறையில்  20,460 பேரும்  வேலை நீக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர தொழில் நிபுணத்துவம், அறிவியல் மற்றும்  தொழிற்நுட்பத் துறையைச் சேர்ந்த   18,731 பேரும்,  கட்டுமான  தொழில்துறையில்  15,686 பேரும் வேலை இழந்திருப்பதாக சிவக்குமார் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!