கோலாலம்பூர், ஜன 31 – பாசீர் கூடாங்கிலுள்ள ஜோகூர் துறைமுகத்தில் செயல்பட்டுவந்த உதவித் தொகை பெறப்பட்ட டீசல் கடத்தல் கும்பல் முறியடிக்கப்பட்டது. புக்கிட் அமான் போலீஸ் ஒத்துழைப்போடு முறியடிக்கப்பட்ட அந்த நடவடிக்கையில் 13 வெளிநாட்டு கப்பல் ஊழியர்கள் கைது செய்யப்பட்டதோடு ஒரு சரக்குக் கப்பலும் கப்பலும் பறிமுதல் செய்யப்பட்டது.
மெரின் போலீஸ் படை மற்றும் மெரின் வேவுப் பிரிவு ஆகியவை இணைந்து மேற்கொள்ளப்பட்ட அந்த நடவடிக்கையின்போது 138,270 லிட்டர் டீசல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டாக புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத்துறையின் இயக்குனர் டத்தோஸ்ரீ ஹசானி கசாலி கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களில் உள்நாட்டைச் சேர்ந்த மூன்று ஆடவர்களும் அடங்குவர். மேலும் 20.6 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள இரண்டு எண்ணெய் கொள்கலன்கள் , இரண்டு எண்ணெய் பம்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டதாக ஹசானி தெரிவித்தார். கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் உதவித் தொகை செலுத்தப்பட்ட பொருட்களின் கடத்தலை தடுப்பதற்கு உள்நாட்டு வாணிகம் மற்றும் செலவினம் அமைச்சுடன் போலீஸ் ஒத்துழைத்து வருவதாகவும் ஹசானி தெரிவித்தார்.