ஈப்போ, டிச 24 – ஈப்போ, தாமான் மான்ஷனில் தமது வீட்டில் நிகழ்ந்த கொள்ளையில் வர்த்தகர் ஒருவர் 1.24 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ரோலக்ஸ் கைக் கடிகாரங்கள் மற்றும் நகைகளை இழந்துள்ளார்.
28 வயதுடைய அந்த வர்த்தகர் தாம் சேமித்து வைத்திருந்த ரோலக்ஸ் ஆடம்பர கைக்கடிகாரங்களுடன், நகைகள், கை தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினியையும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக போலீசில் புகார் செய்திருக்கிறார் என ஈப்போ போலீஸ் தலைவர் யஹாயா ஹாசன் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழிகளை கண்டறிவதற்காக சிறப்பு நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். அவர்களை கண்டறிவதற்கு உதவியாக இரண்டு ஆடவர்களின் புகைப்படங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளளதாக யஹாயா ஹாசன் கூறினார். இந்த கொள்ளை தொடர்பான தகவலை அறிந்தவர்கள் உடனடியாக போலீசுடன் தொடர்புகொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டார்.