Latestமலேசியா

3 இந்தியர் பாரம்பரிய துறைகளில் வெளிநாட்டு தொழிலாளர்களை தருவிக்க சிறப்பு அனுமதி வேண்டும் ; MIET

கோலாலம்பூர், மார்ச் 17 – கடந்த 13 ஆண்டுகளாக தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சனையை எதிர்நோக்கிவரும் , முடிதிருத்தும் துறை , பொற்கொல்லர், ஜவுளி ஆகிய 3 துறைகளில் வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தருவிக்க சிறப்பு அனுமதியை வழங்குமாறு , MIET – எனப்படும் மலேசிய இந்தியர் பொருளாதார உருமாற்ற அமைப்பு, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமை கேட்டுக் கொண்டிருக்கிறது.

அத்துறைகளில் , வெளிநாட்டுத் தொழிலாளர்களை தருவிக்கும் நடைமுறை 2009 –முதல் முடக்கி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது தற்காலிக வேலை பயண பாஸ்- சை புதுப்பிப்பதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால், அந்த 3 துறைகளைச் சேர்ந்த 10,000 வர்த்தகங்கள் மூடும் அபாயத்தில் இருப்பதாக, அவ்வமைப்பின் துணைத் தலைவர் எம். வெற்றிவேலன் தெரிவித்தார்.

இந்த 3 துறைகளில் வேலை செய்ய வெளிநாட்டு தொழிலாளர்களை தருவிக்க இயலாத சூழலில் , இந்தியர் பாரம்பரிய துறைகள் மெல்ல சாகுமென அவர் குறிப்பிட்ட்டார்.

அந்த மூன்று தொழில்துறைகளும், மலேசிய இந்திய சமூகத்துக்கு முக்கிய பங்களிப்பை செய்வதை அடுத்து, பிரதமர் இவ்விவகாரத்தை கவனத்தில் எடுத்துக் கொள்வார் என அவர் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!