
கோலாலம்பூர், மார்ச் 8 – ஜோகூர், மலாக்கா, பகாங் ஆகிய மாநிலங்களில் வெள்ள நிலைமை சீரடைந்து வருகிறது.
அதையடுத்து, வெள்ளத்துக்குப் பிந்திய நடவடிக்கைகளில் ஈடுபட , மாநில அரசாங்க அமைப்புகள், அரசாங்க சார்பற்ற அமைப்புகள் ஆகியவற்றின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக, NADMA -தேசிய பேரிடர் நிர்வாக மையம் தெரிவித்தது.
இதனிடையே, வெள்ளம் வடிந்து விட்ட மாநிலங்களில் துப்புறவு பணிகளை மேற்கொள்வதற்கான சாதனங்களையும், ஆட்பலத்தையும் அனுப்பி வைக்க , வெள்ளம் பாதிக்கப்படாத சில மாநிலங்கள் தயாராக இருப்பதாகவும் அம்மையம் தெரிவித்தது.