Latestமலேசியா

கிள்ளான் கம்போங் ஜாவா ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயம்; 3,800 கார்த்திகை தீபங்களின் ஒளி வெள்ளத்தில் மிதந்தது

ஷா அலாம், நவ 29 – கிள்ளான், ஜாலான் கம்போங் ஜாவா சாலையில் மூன்றவாது மைலில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கார்த்திகை திருவிழாவில் 3,800 தீபங்கள் ஏற்றி சாதனை படைக்கப்பட்டது. அந்த ஆலயம் கார்த்திகை தீப விளக்குகளின் ஒளி வெள்ளத்தில் மிதந்தது, கண்கொள்ளா காட்சியாக இருந்தது . ஆலய சேவை குழுவினரின் ஏற்பாட்டில் பக்தர்கள் மிவும் ஆர்வத்தோடு ஆலயத்தில் 3,800 தீபங்கள் ஏற்றப்படுவதற்கு உதவியாக இருந்ததாக ஆலய சேவை குழுவினரின் தலைரான எஸ் .எம் கண்ணன் தெரிவித்தார். அந்த கார்த்திகை விளக்குகள் வேல், ஓம் விநாயகர் மற்றும் பூ வடிவில் அமைக்கப்பட்டிருந்தது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பக்தர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.

நான்காவது ஆண்டாக நடைபெற்ற கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வைச் தொடர்ந்து சிறப்புப் பூஜைகளும் முருகப் பெருமானின் உள்வீதி ஊர்வலமும் நடைபெற்றதோடு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு எல்லா வகையிலும் சிறப்பாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய ஆலயத் தலைர் விஸ்வநாதன் மற்றும் ஆலய நிர்வாகக் குழுவினருக்கும் நன்றியை ஆலய சேவைக் குழுவினர் தெரிவித்துக் கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!