கோலாலம்பூர், மார்ச் 6 – Touch n’ Go அட்டைகளை தவிர்த்து, இதர ரொக்கமில்லா முறையை பயன்படுத்தி, பயணிகள் தங்கள் பேருந்து கட்டணத்தை செலுத்த Rapid KL கூடிய விரைவில் அனுமதிக்கும்.
அதற்கான குத்தகை விவரங்கள் விரைவில் வெளியிடப்படுமென, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
தற்சமயம், பேருந்துகளில் Touch n’ Go அட்டைகளை மட்டுமே பயன்படுத்தி கட்டணத்தை செலுத்த முடியும்.
அதனால், அந்த திறந்த கட்டண முறையை, பேருந்துகளில் முதலில் அறிமுகம் செய்யுமாறு தாம் Prasarana நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும், அமைச்சர் சொன்னார்.
அதே முறை, இலகு இரயில் நிலையங்களிலும் செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். எனினும், அது ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை உள்ளடக்கி உள்ளதால், இலகு இரயில் நிலையங்களில் “டோக்கன்” போன்ற மாற்று வழிகள் உள்ளதாகவும் அமைச்சர் சொன்னார்.