கோலாலம்பூர், டிச 17 – சிலாங்கூரில் நேற்று பெய்த கடும் மழையினால் பூச்சோங் IOI வர்த்தக மையத்தில் வெள்ளம் புகுந்தது.
வர்த்தக மையத்தின் தரைப்பகுதியில் உள்ள கடைப் பகுதிகளில் கனுக்கால் அளவுக்கு வெள்ளம் புகுந்ததால் அங்குள்ள வர்த்தகர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். அதோடு IOI ‘Mall’ மாலின் திறந்த வெளி வாகன நிறுத்துமிடத்தில் இருந்த பல கார்களும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டன.
வெள்ளம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் அதிகமாக பகிரப்பட்டன.
நேற்று மாலை 6.55 மணி அளவில் அந்த வர்த்தக மையத்தில் நீர்மட்டம் அதிகரித்ததைத் தொடர்ந்து சுபாங் ஜெயா மாநகநர் மன்றம் வெள்ள எச்சரிக்ககையை வெளியிட்டது.
முதலில் IOI மாலின் வட கோர்ட் ‘North Court’ வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட வெள்ளம் பிறகு அந்த வர்த்தக மையத்திற்கு புகுந்ததாக அந்த வர்த்தக மையத்திற்கு பொருட்களை வாங்க வந்த பலர் தெரிவித்தனர்.
மற்றொரு நிலவரத்தில் நேற்று மாலை LDP நெடுஞ்சாலை மற்றும் கூட்டரசு நெடுஞ்சாலை பகுதியிலும் வெள்ளம் ஏற்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது