கோலாலம்பூர், மார்ச் 6 – சாலை விபத்துக்களினால் நாட்டில் நாள்தோறும் சராசரி 18 மரணங்கள் நடைபெறுகின்றன. கடந்த ஆண்டு முழுவதிலும் தினசரி 12 பேர் மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட விபத்துக்களில் இறந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் Anthony Loke Siew Fook தெரிவித்திருக்கிறார். கடந்த ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்துக்களில் 6,443 பேர் உயிரிழந்தனர். ஐந்து ஆண்டுகளில் கடந்த ஆண்டு அதிக மரணங்கள் உட்படுத்திய விபத்துக்கள் நிகழ்ந்ததாக அவர் கூறினார். சாலை விபத்துக்களால் தினசரி ஏற்படும் 18 மரணங்களும் ஒவ்வொரு 80 நிமிடத்திற்கு ஒருவர் என்ற நிலையில் இருந்ததாக Anthony Loke தெரிவித்தார்.