Latestமலேசியா

விரிவாக்கம் செய்யப்படாத திட்டத்திற்கு 150,000 ரிங்கிட் லஞ்சம் கோரிய ஆடவரை எம்.ஏ.சி.சி கைது செய்தது

கோத்தா கினபாலு, பிப் 27 – விரிவாக்கம் செய்யப்படாத திட்டத்திற்கு 150,000 ரிங்கிட் லஞ்சம் கேட்ட ஆடவர் ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC கைது செய்தது. சபா Beluran னில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்திற்கு 1.5 மில்லியன் ரிங்கிட் செலவிலான விரிவாக்க திட்டத்தை குத்தகையாளர் ஒருவருக்கு பெற்றுத் தருவதாக கூறி அவரிடம் 60 வயதுடைய சந்தேகப் பேர்வழி லஞ்சம் கேட்டுள்ளார்.

அந்த சந்தேக நபர் நேற்று காலை 10 .30 மணியளவில் MACC அலுவலகத்தில் கைது செய்யப்பட்டதை சபா MACC இயக்குனர் S .Karunanithy உறுதிப்படுத்தினார். 2009ஆம் ஆண்டின் MACC சட்டத்தின் 16 ஆவது விதியின் கீழ் அந்த ஆடவருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டதாகவும் இன்று காலையில் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு கொண்டுவரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!