Latestமலேசியா

5 வயது மகன் கொலை தாய் காதலன் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், செப் 1 – 5 வயது சிறுவனை கொலை செய்ததாக அச்சிறுவனின் தாயான 44 வயதுடைய மேரி தே மற்றும் அவரது காதலனான 29 வயதுடைய புவனேஸ்வரன் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அவ்விருவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அதனை புரிந்துகொண்டதற்கு அடையாளமாக தலையை அசைத்தனர். இந்த குற்றச்சாட்டு உயர்நீதிமன்றத்திற்கு உட்பட்டதாக இருப்பதால் அவ்விருவரிடமும் வாக்கு மூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. ஸ்ரீ கெம்பாங்கான் , தாமான் புஞ்சாக் ஜாலிலில் உள்ள வீட்டில் அவர்கள் இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது, கடந்த ஆகஸ்டு மாதம் 22 ஆம் தேதி அதிகாலை மணி 12. 55 அளவில் அவர்கள் இக்குற்றத்தை புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டனர். அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!