கோலாலம்பூர், பிப்ரவரி 27 – மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்களுக்கான, SST – விற்பனை மற்றும் சேவை வரி விகிதத்தை நிலைநிறுத்துவதற்கான சாத்தியத்தை அரசாங்கம் மறுக்கவில்லை.
மார்ச் 20-ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ள, அடுத்த NACCOL – தேசிய வாழ்க்கை செலவின கூட்டத்தில், அவ்விவகாரத்தை தமதமைச்சு முன் வைக்குமென, உள்நாட்டு வாணிப வாழ்க்கை செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் அலி தெரிவித்தார்.
மார்ச் முதலாம் தேதி தொடங்கி, SST – விற்பனை மற்றும் சேவை வரி உயர்வு அமலுக்கு வருகிறது.
எனினும், மின்சார மற்றும் தண்ணீர் கட்டணங்களுக்கான வரியை நிலைநிறுத்துவது குறித்து, NACCOL கூட்டத்தில் மீண்டும் விவாதிக்க பரிந்துரை முன் வைக்கப்படுமென, மக்களவை கேள்வி பதில் நேரத்தின் போது அர்மிசான் சொன்னார்.