Latestமலேசியா

55 வயதிற்குட்பட்ட 6.3 மில்லியன் இ.பி.எப் உறுப்பினர்கள் RM10,000க்கும் குறைவான சேமிப்பைக் கொண்டுள்ளனர்

கோலாலம்பூர், நவ 21 – 55 வயதுக்குட்பட்ட 6.3 மில்லியன் இ.பி.எப் சந்தாதாரர்கள் அல்லது உறுப்பினர்கள் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை தங்கள் கணக்குகளில் 10,000 ரிங்கிட்டிற்கும் குறைவாகவே வைத்திருக்கின்றனர் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில், கோவிட்-19 தொடர்பான சிறப்புத் மீட்புத் தொகை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, ஏப்ரல் 2020 இல் பதிவு செய்யப்பட்ட 4.7 மில்லியன் உறுப்பினர்களில் இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. RM10,000 க்கும் குறைவான சேமிப்புடன், உறுப்பினர்கள் 20 ஆண்டுகளுக்கு ஒரு மாதத்திற்கு RM42 க்கும் குறைவான ஓய்வூதிய வருமானம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இ.பி.எப்பின் முதலாவது சேமிப்பு கணக்கிலிருந்து கூடுதலாக பணத்தை மீட்கும்போது அது சேமிப்பில் நீண்ட கால விளைவை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

அதாவது EPF உறுப்பினர்களிடையே ஓய்வூதிய சேமிப்பில் குறிப்பிடத்தக்க குறைந்த தொகையாக அது அமைந்துவிடும் என நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. பொருளாதாரம், உற்பத்தித்திறன், சமூக நலன், வாழ்க்கைத் தரம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் நாடு மற்றும் மக்கள் மீது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் வேகமாக வயதான மக்கள்தொகையை நாடு எதிர்கொள்வதைக் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தை நிதி அமைச்சு கடுமையாக கருதுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!