Latestமலேசியா

ரெம்பாவ் கூனோங் டத்தோவில் காயம் அடைந்த பெண் மூன்று மணி நேரத்திற்குப் பின் மீட்பு

ரெம்பாவ், பிப் 25 – ரெம்பாவ் கூனோங் டத்தோகில் உல்லாசமாக பொழுது போக்கச் சென்ற பெண் ஒருவர் காயம் அடைந்ததைத் தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்குப் பின் அங்கிருந்து மீட்கப்பட்டார். நேற்று மாலை மணி 6:44 அளவில் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ரெம்பாவ் கொத்தாவைச் சேர்ந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவின் தலைவர் முகமட் இஸ்கந்தர் உஸ்மான் தலைமையிலான மீட்பு குழுவினர் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்றதாக நெகிரி செம்பிலான் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அங்கு சென்றபோது அந்த மலையடிவாரத்திலிருந்து 500 மீட்டர் தூரத்தில் 49 வயது பெண் கால் பாதத்தில் காயம் அடைந்த நிலையில் நடக்க முடியாத நிலையில் இருந்ததை தீயணைப்பு மீட்பு பணியாளர்கள் கண்டனர். நடக்க முடியாத நிலையில் இருந்த அப்பெண்ணை மலையடிவாரத்திற்கு மிகவும் கவனமாகவும் மெதுவாகவும் கொண்டு வர வேண்டிய சூழ்நிலைக்கு மீட்பு குழுவினர் உள்ளாகினர். இதனால் நேற்றிவு மணி 10:30 அளவில்தான் அப்பெண் அங்கிருந்து மீட்கப்பட்டதாக தீயணைப்பு படையின் பேச்சாளர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!